விடுகதைகள்


11) ஊருக்கு நடுவே உயர்ந்திருக்கும், உருவங்கள்
பலவும் சுமந்திருக்கும். அது என்ன?
-
12) ஊரெல்லாம் மூடி இருக்கும், ஊறுகாய்ப் பானை
திறந்திருக்கும். அது என்ன?
-

13) கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப்
பையனாய் மிதப்பான்- அவன் யார்?

-
4) உள்ளே இறுகுவான், வெளியே உறுகுவான்-
அவன் யார்?
-

15) எண்ணெய் வேண்டாம், திண்ணை போதும்
எரிவான், வெளிச்சம் தருவான்- அவன் யார்?

16) ஒட்டியிருந்த மகளை விட்டுப் பிரிந்து
வந்தேனே- அது என்ன?
-

17) அழிக்கும் பணி கொண்ட இவனுக்கு
பள்ளிப் படிப்பில் தனியிடம் உண்டு-
அது என்ன?
-

18) மரக் கிளையே தலையில் இருந்தாலும்
மனம் கலங்கித் திரிவான் காட்டுக்குள்.
அவன் யார்?
-

19) வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்
-அவன் யார்?
-

20) மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையும்-
அது என்ன?

===============================
விடைகள்;20) சாம்பிராணி
19) உப்பு
18) மான்
17) ரப்பர்
16) உமி- நெல்
15) மெழுகுவர்த்தி
14) ஐஸ்கட்டி
13) பூரி
12) கிணறு
11) கோபுரம்