சருகுச் சேலைக்காரி …!1

21) குதிரை ஓட ஓட வால் குறையும்.
அது என்ன?
-

22) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால்
பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
-

23) எல்லா வித்தையும் தெரிந்தவன்.
தெரியாதவன் போல் பாவனை செய்கிறான்.
அவன் யார்?

-
24) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான்
அவன் யார்?
-

25) தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல்.
தோழனுக்கு இரண்டு வாசல். அவன் யார்?
-

26) அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம்,
குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம்
தித்திப்பு. அது என்ன?
-

27) கடலைக்கலக்குது ஒரு குருவி, கடல்
ஓரம் போகுது ஒரு குருவி, செடியைத்தின்பது
ஒரு குருவி, செடியோரம் போகுது ஒரு குருவி
அவை யாவை?
-

28) உடல் உண்டு, தலை இல்லை, கையுண்டு
கால் இல்லை, தானாகவே ஓடும். அது என்ன?
-

29) ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே
கூட்டும். அவன் யார்?
-

30) எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே
ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள்-அது என்ன?

==================================விடைகள்;30) புடலங்காய்
29) காகம்
28) கடிகாரம்
27) நண்டு, ஆடு, பாம்பு
26) வாழைமரம்
25) சட்டை
24) யானை
23) கோமாளி
22) இலவம்பஞ்சு
21) ஊசி நூல்