) சின்ன மீசைக்காரன், ‘மியாவ் மியாவ்’
ஓசைக்காரன்- அவன் யார்?
2)சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,
இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்
குடித்தது யார்?
3)செடிக்குக் கீழ் வரும் கிழங்கு, செழுமையாக
இருக்கும் பெண்மைக்கு இது பெருமை-
அது என்ன?
4)செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள்
நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார்
மகள்- அது என்ன?
5) சேலம் சிவப்ப,செவ்வாய்ப்பேட்டை கருப்பு,
உடைத்தால் வெள்ளை, உண்டால் கசப்பு-
அது என்ன?
6) சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள்-
அது என்ன?
7) சுமையும் தாங்கும், உதையும் கொடுக்கும்-
அது என்ன?
8- செய்தி வரும் முன்னே, மணியோசை வரும்
முன்னே - அது என்ன?
9) சாவடிக்குள்ளே ஒரு சப்பட்டைக் கல்-
அது என்ன?
10) சிலு சிலுத்த தண்ணீரில் செம்மறிஆடு
மேயுது- அது என்ன?
தொகுத்தவர்; புலவர் அ.சா.குருசாமி
=============================
விடைகள்;
10) குழிப்ணியாரம்
9) நாக்கு
8- தொலைபேசி
7) கழுதை
6) மின்விசிறி
5) குன்றிமணீ
4) மிளகாய்
3) மஞ்சள்
2) கொசு
1) பூனை
ஓசைக்காரன்- அவன் யார்?
2)சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,
இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்
குடித்தது யார்?
3)செடிக்குக் கீழ் வரும் கிழங்கு, செழுமையாக
இருக்கும் பெண்மைக்கு இது பெருமை-
அது என்ன?
4)செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள்
நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார்
மகள்- அது என்ன?
5) சேலம் சிவப்ப,செவ்வாய்ப்பேட்டை கருப்பு,
உடைத்தால் வெள்ளை, உண்டால் கசப்பு-
அது என்ன?
6) சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள்-
அது என்ன?
7) சுமையும் தாங்கும், உதையும் கொடுக்கும்-
அது என்ன?
8- செய்தி வரும் முன்னே, மணியோசை வரும்
முன்னே - அது என்ன?
9) சாவடிக்குள்ளே ஒரு சப்பட்டைக் கல்-
அது என்ன?
10) சிலு சிலுத்த தண்ணீரில் செம்மறிஆடு
மேயுது- அது என்ன?
தொகுத்தவர்; புலவர் அ.சா.குருசாமி
=============================
விடைகள்;
10) குழிப்ணியாரம்
9) நாக்கு
8- தொலைபேசி
7) கழுதை
6) மின்விசிறி
5) குன்றிமணீ
4) மிளகாய்
3) மஞ்சள்
2) கொசு
1) பூனை