விடுகதைகள் 2

1) ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை.
அது என்ன?
-

2) காய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டால்
காவற்காரப்பையன் கோபத்திற்கு வருவான்.
அவன் யார்?
-

3) முகம் இருக்கிறது, கைகள் இருக்கிறது.
கால்கள் இல்லை, நடக்கிறேன்.நான் யார்?
-

4) சின்னச்சின்ன கதவுகள், தச்சன் செய்யாக்
கதவுகள், கதவடைக்கும் சத்தம் கேட்காது.
அவை என்ன?
-

5) அதிகாலை அலாரம், விசேஷ நாட்களில்
சமையல் ஆகிவிடும். அது என்ன?
-

6) ஒரு சாண் மனிதனுக்கு உடம்பெல்லாம்
பற்கள். அவன் யார்?
-

7) சமைக்க முடியாத மீன்கூட்டம் எட்டாத
உயரத்தில். அது என்ன?
-

8- இறக்கையில்லாப் பறவை ஊர்விட்டு ஊர்
பறக்கும். வாயில்லாத சேதிகளைச் சொல்லும்.
அது என்ன?
-

9) இவனைப் புரட்டப் புரட்ட புது புது அர்த்தங்களை
உணர்த்திடுவான். அவன் யார்?
-

10) ஆயிரம் கதைகள் எழுதுவான், அகிலத்தை
ஆட்டி வைப்பான், நாக்கு வறண்டால்
வீழ்ந்திடுவான். அவன் யார்?

==================================
விடைகள்;10) பேனா
9) அகராதி
8-கடிகாரம்
7) விண்மீன்
6) சீப்பு
5) சேவல்
4) கண்ணிமைகள்
3) கடிகாரம்
2) தேன்கூடு
1) மரம்