புலி-புல்லுக்கட்டு-ஆடு!

ஒரு விவ​சாயி இருந்​தான்.​ அவன் ஒரு ஆட்டை​யும் புலியை​யும் வளர்த்து வந்​தான். இரண்டை​யும் தனித்தனியாகத்​தான் வைத்தி​ருந்​தான்.
ஏனெ​னில் புலி, ஆட்​டைத் தின்றுவி​டும் என்று அவ​னுக்கு நன்​றாகத் தெரி​யும். ஆட்​டிற்கு வைத்தி​ருந்த புல் தீர்ந்து​விட்டது.
எனவே புல் கட்டு வாங்குவதற்​காக சந்​தைக்​குச் சென்​றான். புலியை​யும் ஆட்டை​யும் பாது​காப்​பாக தன்னுடன் அழைத்​துச் சென்​றான்.
-
புல்கட்டு வாங்கி வீடு திரும்​பும் போது மழை வருவது போலி​ருந்தது. எனவே குறுக்கு வழி​யில் சீக்கிரம் வீட்​டிற்​குச் சென்றுவிட​லாம் என்று நினைத்​தான் விவ​சாயி.​ குறுக்கு வழி​யில் செல்வ​தென்​றால் ஒரு ஆற்​றுப் பாலத்​தைக் கடந்து செல்ல வேண்​டும்.
மிகக் குறுக​லான பாலம் அது. ஒரு நேரத்​தில் ஒருவர்​தான் செல்ல முடி​யும். சுற்று வழி​யில் சென்​றால் மழையி​லும் காற்றி​லும் மாட்டி துன்பப்பட வேண்டியி​ருக்​கும். எனவே அவன் பாலத்தை நோக்​கிச் சென்​றான்.
-
குறுக​லான பாலத்​தில் அவன் மட்​டுமே செல்ல முடி​யும். ஆனால் தன்னுடன் எதையாவது ஒன்றை மட்​டும் தூக்​கிச் செல்ல​லாம். புலி, புல்​லுக்கட்டு, ஆடு – இதில் ஏதாவது ஒன்றை மட்​டும் தன்னுடன் தூக்​கிச் செல்ல​லாம்.
-
இப்​போது என்ன செய்வது?
புலியை​யும் ஆட்டை​யும் இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்​றால்,​புலி ஆட்​டைக் கொன்றுவி​டும். புல்​லுக்கட்டை வைத்து​விட்டு புலி​யைத் தோளில் தூக்​கிச் சென்​றால் ஆடு புல்​லுக்கட்டை தின்று சிதற​டித்துவி​டும்.
ஆட்டை​யும் புலியை​யும் ஒன்​றாக விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ புல்​லுக்கட்டை​யும் ஆட்டை​யும் விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ பிறகு எப்படி மூன்றை​யும் அக்கரை சேர்ப்பது? அவன் யோசித்து யோசித்​துப் பார்த்​தான். ஒரு வழி​யும் தெரிய​வில்லை. நீங்கள் ஏதாவது அவ​னுக்கு ஆலோ​சனை சொல்​லுங்க​ளேன்.
விடை இது​தான்:
-
முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வர​வேண்​டும்.​ பிறகு புலி​யைத் தூக்​கிச் செல்ல​வேண்​டும்.
அங்கி​ருக்​கும் ஆட்டை எடுத்​துக் கொண்டு இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ (அக்கரையி​லேயே விட்டு​விட்​டால் புலி ஆட்​டைத் தின்றுவி​டும்).
ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பின்பு தனியாகத் திரும்பி இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​
அடுத்தது,ஆட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல​வேண்​டும்.
-
இன்​னொரு வழி:
-
முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். தனி​யாக இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்று அக்கரை​யில் வைத்து​விட்டு ஆட்டுடன் இக்கரை வர​வேண்​டும்.​ ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புலியை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வந்து ஆட்​டைக் கொண்டு செல்ல வேண்​டும்.